கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் நல்ல செய்தி

 Gas cylinder news in 2022 tamil

இந்தியாவை பொறுத்தவரை பொதுமக்கள் அனைவரும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றன என்று அனைவருக்கும் தெரியும். இது மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தின் கீழ் அனைத்து ஏழை எளிய மக்களுக்கு  மானிய விலையிலான கேஸ் சிலிண்டர் இணைப்புகளானது வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒரு வருடமாக கேஸ் சிலிண்டர் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என சில குறிப்புகள் வெளிவந்துள்ளன. இதனால் சாமானிய  மக்கள்  மற்றும் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  இதனால் இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளதாம்.

டிஜிட்டல் முறையில் ரசீது 

இந்தியாவில் அனைத்து மாநில அரசுகள் ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு தேவையான  அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அன்றாட வாழ்வில் அத்தியாவசிய பொருள்களை மலிவு விலையில் வழங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே
. அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலையின் போது மக்களின் நலன் கருதி இலவசமாக உணவு தானியங்கள், மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது. அதையடுத்து தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டமும் நடைமுறையில் நம் நாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என அறிவிப்பு வந்துள்ளன. அதன்படி இந்தியாவில் விரைவில் 5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்கள் அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு விநியோகம் வழங்கப்படும், கேஸ் சிலிண்டர் விலை என்ன என்பது இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று குழப்பத்தில் உள்ளனர். விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறதாம்.

இந்தியாவில் ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் போது வாடிக்கையாளரிடம் ஒரு காகித ரசீதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் காகிதத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் காகித பயன்பாட்டை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாம். இந்த நிலையில் இந்தியாவில் தற்போது அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த வகையில் இண்டேன் சமையல் சிலிண்டரை பெரும்போது இனி டிஜிட்டல் முறையில் ரசீது வழங்கபடுவதாக என்றுஇந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி  காகிதமில்லா இந்தியா என்னும் புதிய நடைமுறை பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாம். எனவே  அதன்படி இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் தங்களின் ரசீதுகளை https://cx.indianoil.in என்ற இணைய முகவரிக்கு சென்று பார்க்கலாம் என கூறப்பட்டு உள்ளது. காகித ரசீதுகளை பெற விரும்புபவர்கள் தனது மொபைலில் இந்தியன் ஆயில் ஒன் ஆப் எனும் செயலி அல்லது தங்களது எரிவாயு விநியோகஸ்தரிடம் தாங்கள் கேட்டு பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள்.

Leave a Reply